நாரில் தொடுத்த சில மலர்கள்

‘மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?’ என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.

என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
” யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. “இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது” எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.”

இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.

நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.

பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.

ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.

அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.

மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.

இன்னும் வரும்.

மஞ்சூர் ராசா இல் பதிவிடப்பட்டது . 5 மறுமொழிகள் »

வலைச்சரத்தின் நார்!

என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.

நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை வரி ராசா என்றுக்கூட கிண்டல் அடிக்கின்றனர். ஆனாலும் மதித்து அழைத்ததற்கு நன்றி.

எனது வலைப்பூவில் வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது ஆசையாகவே தான் இன்னும்.

முக்கியமாக முத்தமிழ் மடலாடற் குழுவின் நிர்வாகத்தில் இருப்பதால் பதிவுகள் பக்கம் வர அதிக நேரம் இருப்பதில்லை.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் சில மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்துள்ளேன்.
எனது பதிவில் நான் எழுதியுள்ள முன்னிறுத்தல் என்னும் கட்டுரை உங்களுக்கு பயன்படலாம்.

மேலும் சில மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், நகைச்சுவை கட்டுரைகளும் உள்ளன. நேரம் இருந்தால் பாருங்கள்.

அரசியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் இருந்தாலும் எல்லாவற்றிலும் மேலோட்டமாகத்தான் சுற்றி வருவதே வாடிக்கையாக போய்விட்டது.

வலைப்பூக்கள் என்னும் தமிழ் பதிவுகள் மற்றும் குழுமங்கள் மூலம் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளதும் பல புது விசயங்கள் அறிந்துக்கொள்ள முடிவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

கட்டற்ற சுதந்திரம் இருப்பதனால் தனி மனித இன மத தாக்குதல்கள் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளித்தாலும் அதையும் தாண்டி பல நல்ல படைப்புகளும் புதிய பல படைப்பாளிகளும் தங்கள் திறமையினால் கவனிக்கத்தக்கவர்களாக வளர்ந்துவருவதை மறுப்பதற்கில்லை.

சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்த பதிவர் பட்டறை மூலம் அது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல பல பட்டறைகள் நடத்தப்படவேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக தொடர்ந்து உழைத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள்.

இனி நான் தொடர்ந்து படித்தும் ரசித்தும் வரும் ஒரு சில பதிவுகளை பற்றி நாளை.

மஞ்சூர் ராசா இல் பதிவிடப்பட்டது . 6 மறுமொழிகள் »

தொடுத்தவரும் தொடுப்பவரும்…

சவுண்ட் பார்ட்டி உதயகுமார் இந்த வாரம் வலைச்சரத்தை தொடுத்து தந்தார். அவர் படிக்கலாம் வாங்க அப்படின்னு ஒரே மலரில் மூணு சரம் தொடுத்து விட்டாரேன்னு நெனச்ச போது தான் பொருளாதாரத்தில் ஆரம்பிச்சு, வாழ்வியலுக்கு வந்து நகைச்சுவையில் கொண்டு போய் கதம்பமாகத்தான் தொடுத்திருக்கிறாரென்று தெரிந்தது. தலைப்பு மட்டும் தான் பொதுவாக கொடுத்து தொடர்ர்ர்ர்ராக தந்திருக்கிறார்.

இனி இந்த வார ஆசிரியர் யார்னு பார்த்தால் மஞ்சூர் ராஜா! வலைப்பதிவில் ரொம்ப இடைவெளி விட்டு பதிந்தாலும் அன்புடன் உட்பட பல வலைக்குழுமங்களில் இயங்கியவர் இப்போது முத்தமிழ் வலைக்குழுமத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். வலைச்சர வாரத்தையும் சுறுசுறுப்பாக கொண்டு செல்வார் என நம்பலாம்.

மஞ்சூர் ராஜா தொடர்கிறார்…

* அறிமுகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.