சில சிறந்த சிறு கதைகள்…

மன்னிக்கவும் நண்பர்களே…

கடும் அலுவலக பணியின் காரணமாய் என் தமிழ்மண பணியினை சரிவர செய்ய இயலாமல் சென்றதற்கு என்னை மன்னிக்கவும்..

எனக்கு சிறுகதை ரொம்ப பிடிக்கும். அநாவசியமா வர்ணனை இல்லாம கருத்தை சரியா பதிய வைக்கிற முயற்சி எல்லோருக்கும் வரும்ன்னு எனக்கு தோணல. அப்படி என்னை பாதிச்ச சில கதைகள இங்க பட்டியல் போட்டிருக்கேன்.

முதலில் சேவியர் இவரது ஏலி ஏலிலெமா சபக்தானி கதையை திண்ணையில் படித்து இருக்கிறேன்.. இது முதல் பரிசு பெற்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பக்க வடிவமைப்பு, நிறம் மிக நேர்த்தியானது. அதே போல் இவரது கடவுள் கேட்ட லிப்ட் கதையும் எனக்கு பிடித்தமானது. இவரது பதிவுகளில் கதைகளில், கவிதைகளில் மயங்குவோர் கண்டிப்பாக திரும்பியும் வருவார்கள்.

அடுத்து சத்யராஜ்குமார் இவரது அமெரிக்க சிறுகதைகளும் பிரபலம். எனக்கு பிடித்த பக்கங்களில் வருபவை… எளிமையாய் விஷயத்தை அருகில் இருந்து பார்ப்பது போல் இருக்கும் இவரது கதைகளில்..

அப்புறம் மோகன் தாஸ், இவர் பக்கத்தை நான் கூகிளில் பார்த்தது தபூசங்கரின் கவிதைகளுக்காக.. ஆனால் மனிதர் சிறுகதைகளில் அடி பின்னியிருந்தார். இவரது நாயகி, என்றும் மாறியதில்லை. யாஹூ குழுமத்தில் போட்டோ போட்டிருந்தார். சரி நேரில் சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள ஒரு நபர். அநியாயத்துக்கு புரியாத வண்ணம் (எனக்கு) கிரிப்டோ கிராஃபி, ஜல்லி போன்ற விஷயங்களை அறிமுகப்படுத்தியவர்.

அப்புறம் எங்க வாத்தியார்…. என் வலையுலக முதல் நண்பர், குரு எல்லாமே… எங்களை கிளாஸ்ல சேத்துக்கிட்டு எங்க அதகளத்தையும் பொறுத்துக்கிட்டு புது விஷயங்களை கத்துக் கொடுக்கறவர். அவரோட கிளாஸ்ரூம்ல எனக்கு இடம் இருக்குங்கறது எனக்கு சந்தோஷமான விஷயம். இவரும் சிறுகதை எழுத்தாளர்ன்னு சொன்னா என் கிளாஸ்மேட்ஸ் என்னை அடிக்க வருவாங்க. கிளாஸ்ரூமுக்கு வர்றதால சிறுகதைய மறந்துட்டாருன்னு நினைக்கிறேன்.. மறுபடியும் அவர் எழுதணும்னு ஆசைப்படுறேன்.

அடுத்து சஞ்சீத்… பெங்களூர் வாசி.. இவரும் சிறுகதை எழுத்தாளர். இவருடைய கதைகள் விமர்சனம் செய்வது எளிதல்ல. இவரது என் பெயர் சித்ரா கதையை படித்த அன்று தூக்கம் வராமல் இருந்திருக்கிறேன்..

இப்போது இவர் எழுதுகிறாரா.. இல்லையா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

இன்னும் நிறைய பேர் சிறுகதை எழுதறாங்க..

ஜோசப் சார், உஷாக்கா, வெட்டிபாலாஜி, பொன்ஸ், முத்துலட்சுமி.. இன்னும் நிறைய பேர சட்டுன்னு ஞாபகத்துக்கு வரல. மன்னிச்சுக்குங்க..

இன்னும் உங்களுக்கு தமிழ் கதை படிக்க ஆசைன்னா இந்த லிங்க தட்டுங்க.

இது மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்பு திட்டத்துல பழைய கதைகள், தொடர்கள், இலக்கிய பாடல்கள்ன்னு வரிசைப்படுத்தி வச்சிருக்காங்க. நான் இதுல தான் முதன் முதல்ல பொன்னியின் செல்வன் படிச்சேன்.. அழகா pdf செஞ்சு வச்சிருக்கறதால ப்ரிண்ட் அவுட்டும் எடுக்க முடியும்..

படிச்சு பாத்துட்டு ஜமாயுங்க………..

அன்புடன்

சென்ஷி

சென்ஷி இல் பதிவிடப்பட்டது . 2 மறுமொழிகள் »

2 பதில்கள் “சில சிறந்த சிறு கதைகள்…” க்கு;

  1. Anonymous Says:

    //என் பெயர் சித்ரா கதையை படித்த அன்று தூக்கம் வராமல் இருந்திருக்கிறேன்..//

    :( (

  2. சேவியர் Says:

    //முதலில் சேவியர் இவரது ஏலி ஏலிலெமா சபக்தானி கதையை திண்ணையில் படித்து இருக்கிறேன்.. இது முதல் பரிசு பெற்ற கதை என்பது குறிப்பிடத்தக்கது.

    இவரது பக்க வடிவமைப்பு, நிறம் மிக நேர்த்தியானது. அதே போல் இவரது கடவுள் கேட்ட லிப்ட் கதையும் எனக்கு பிடித்தமானது. இவரது பதிவுகளில் கதைகளில், கவிதைகளில் மயங்குவோர் கண்டிப்பாக திரும்பியும் வருவார்கள்
    //

    புத்தாண்டை இனிதே துவங்கி வைத்திருக்கிறீர்கள். மனமார்ந்த நன்றிகள்.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.