வணக்கம்…
வலைச்சரம் வேர்ட்பிரஸ் வலைப்பதிவுக்கு இடம் பெயர்கிறது.
வணக்கம்…
வலைச்சரம் வேர்ட்பிரஸ் வலைப்பதிவுக்கு இடம் பெயர்கிறது.
மலரில் தேன் இருப்பது இயற்கையே அதனால் தான் தேன்துளி என தன் வலைமலரை பத்மா அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என நினைக்கிறேன். அவரது பதிவிலிருந்து:
இந்திய அறிவியல் கழக கூட்டம் மதுரையில் நடந்த போது சிறந்த விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி பதக்கங்கள் வழங்க, அன்று மாலை பிரதமருடன் நடந்த விருந்தில் இளம் விஞ்ஞானிகள் சார்பாக என்னை பேச சொல்ல அழைத்தார்கள். ஐந்து நிமிட பேச்சு இருபது நிமிடமாக ஆனதும், ஆராய்ச்சிக்கழகங்களில் ஆய்வகங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களின் உடல்நலம் பாதிக்க கூடிய வகையில், காசநோய், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருந்து எடுக்கும் இரத்தம் செல்களை அகற்றிய பிறகு கழிவுநீர்க்குழாயில் கொட்டப்படுவதும், ரேடியோ கதிர்வீசும் வேதிப்பொருட்கள் பயன்படுத்திய சாதனங்கள் சுத்தம் செய்யப்படுவதும் எத்தனை முறைகேடானது என்பது தொடங்கி, அறிவியல் திட்டங்களுக்கான நிதியில் எத்தனை முறைகேடு நடக்கிறது என்பதற்கு AIIMs இல் நடப்பதை சொன்னதும், மறுநாள் வட இந்திய பத்திரிக்கைகள் young scienctist uproar என்று எழுத, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக, என்னை நீக்கிவிடுவார்கள் என்று அண்ணன் பயப்பட, பெற்றொர் கடிந்துகொள்ள இவை யாவும் நடவாமல், ராஜீவுடன் நெருங்கி பழகவும், பாதிக்கப்பட்ட கடைநிலை ஊழியர் சிலருக்கு மருத்துவ உதவி தரவும், அதன் பின் AIIMSஇல் சில மாற்றங்கள் ஏற்பட்டதும் மறக்க முடியாதது.
பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒரு வலைமலராகும்.
பதினெட்டு வயதில் வீட்டை விட்டு ஓடி, பின் கட்சியை விட்டு, அதன் பின் தமிழ் அறிவு’சீவி’ ‘குழாத்தை’ விட்டு, சீக்கிரமே தமிழ் கல்லை … மன்னிக்க … மண்ணை விட்டு … என தன்னைப்பற்றி கூறும் வளர்மதியின்
வினையானதொகையில் அரசியல் கட்டுரைகள், நவீன கவிதைகள் என படிக்கவும் யோசிக்கவும் ஏராளமான விசயங்கள் இருக்கின்றன.
அமெச்சூர் கலை ரசிகனாகப்பட்ட நான் என்னைக் கவர்ந்த, கவரும் கலைப் படைப்புகளைப் பகிர்ந்துகொள்ளவே இந்த வலைப்பதிவு என்னும் அறிமுகத்துடன் தொடங்கப்பட்டுள்ள பிறழ்வு என்னும் வலைமலரில் மிகவும் அரிதான பல ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன . சாத்தான் (புனைப்பெயர் என நினைக்கிறேன்) பின்குறிப்பாக எழுதியுள்ளது:
தமிழ்ப் பதிப்பகங்களுக்கு: உங்கள் புத்தகங்களுக்கு அட்டைப் படம் போட இந்தப் படங்களை தயவுசெய்து சுடாதீர்கள். இங்குள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். ஆம் உண்மை தான் சுடுவதும் அல்லாமல் எங்கிருந்து சுட்டோம் என்றும் கூட பலர் குறிப்பிடுவதில்லை என்பது மிகவும் வேதனையான ஒரு விசயம்.
இந்த வலைப்பதிவில் இடம்பெற்றிருக்கும் கலைஞர்கள் மற்றும் படைப்புகளின் பட்டியல் இங்கே.
நெருப்பாக கொதிக்கும் மலர்களும் உண்டோ என சிலருக்கு சந்தேகம் வரும் அசுரனின் வலைமலரை பார்த்தால் அது உண்மையென்று புரியும். அவர் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் அக்னி துண்டங்கள் என்றால் மிகையாகாது. சமூக நலனில் மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து எழுதிவரும் அசுரனின் படைப்புகள் நிதர்சனத்தை வெளிச்சப்படுத்துகின்றன.
ஈழத்து வலைப்பதிவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் பொடிச்சி. அவர் கூறுவதை கேளுங்கள்:
2003ம் ஆண்டில இருந்து (அல்லது அதுக்கு முன்னம்) இருந்த ரென்சங்கள எழுதி எழுதீ வச்சிருக்கிறதுதான். வச்சிருந்தா என்ன, கிடக்கும், என்ன வந்தது, ஆனா இன்னும் அதே ரென்சன் அதே வடிவத்தில திரும்பி வரேக்குள்ள…. ehhhh. இனியும் பொறுத்தா உடல்நலத்துக்குக் கேடு எண்டு out of nowhere ஒரு thinking விட்டன். அதன் விளைவு. விதி இந்த blogகுகளுக்குள்ள blogஆ column எழுத விட்டிட்டுது! இதன் தோற்றத்துக்கு வேற பிரத்தியேக காரணம் ஒண்டுங் கிடையாது சிலதைப் பாத்தா ரென்சன் வருது, ரென்சன் கூடுறது படிக்கிற பிள்ளையளுக்கு நல்லதில்ல. அந்த ரென்சனக் குறைக்க தேர்ந்தெடுத்த வழியிது. இதப்படிக்கிற ஆட்களுக்கு ரென்சன் வந்தா அதற்கு தாற்பரியதாதி(?) நான் இல்ல.
என்று சொல்லும் பொடிச்சியின் வலைமலரில் ஈழத்து செய்திகளுடன் வேறு பல முக்கிய படைப்புகளும் அடங்கியுள்ளன. மேலும் படிக்க: பொடிச்சியின் பெட்டைக்குப் பட்டவை அல்லது பெட்டை அலசல்
இன்னும் வரும்.
‘மரணம் உங்கள் வீட்டு வாசற்படியைத் தட்டும்போது
அதனை எந்த பிரார்த்தனை கொண்டு அலங்கரிப்பீர்கள்?’ என்று கேட்கிறது தாகூரின் கவிதை வரிகள்.
என தொடங்கி தன் மீளா துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நண்பர் ஆசிப்பின் மீண்டு(ம்) வருகிறேன் நண்பர்களே!!
வலைப்பூவில் அவர் எழுதியிருப்பது:
” யாஸ்மினிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வருகிறது. “இன்றைக்கு ஒருநாள் மட்டும் கஷ்டப்பட்டு கொஞ்சம் வலியைப் பொறுத்துக்கம்மா. இனிமேல் வாழ்நாள் முழுக்க உனக்கு வலிக்கவே வலிக்காது” எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி நான் என்று நினைக்கும்போது மனது மரத்துப் போகிறது. வலியோடேனும் அவள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.”
இணைய உலகின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஆசிப்பின் சாத்தான் குளத்து வேதம் அனைத்துவித மணம், நிறங்கள் எனக்கூடிய பல வண்ண வலைமலராகும்.
நுனிப்புல் மேய்வதைப் பற்றி நேற்று எழுதியதை தனது வலைப்பூவின் தலைப்புடன் இணைத்து வாழ்த்தி பின்னூட்டம் இட்டிருக்கும் உஷா ராமச்சந்திரனின் நுனிப்புல் நான் தொடர்ந்து படித்து வரும் ஒன்று. நுனிப்புல் என அவர் தலைப்பிட்டிருந்தாலும் அதில் உண்மையில்லை. ஆரம்பத்திலிருந்தே அவரது பல படைப்புகளை படித்துவருவதால் இதை நான் ஆணித்தரமாக கூறுகிறேன். நீண்டக்காலமாக இணைய உலகிலும் ஊடகங்களிலும் எழுதிவரும் இவரின் மலர் அரங்கத்திற்குள் நுழைந்தாலே உங்களுக்கு அது புரிந்துவிடும். தோழியர்களுடன் இணைந்து முதன் முதலில் பெண்களுக்கான வலைப்பதிவு ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவர் என்பது கூடுதல் செய்தி.
பின்நவீனத்துவம் என்றாலே பலர் ஓடிஒளிந்துக்கொள்ளும் இந்த காலத்தில் விடாமல் அதில் தீவிர ஆர்வம் காட்டுவதுமட்டுமல்லாமல், நவீனக் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என முழுவதும் வித்தியாசமான தளத்தில் இயங்கி வருபவரும், பல அருமையான திரைப்படங்களை பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிவருபவருமான நண்பர் அய்யனாரின் தனிமையின் இசை என்னும் வலைமலர் அடர்ந்த வனாந்தரத்தில் எங்கோ பூத்து தன் மணத்தால் அனைவரையும் கவர்ந்திழுக்கும் அற்புதமான ஒரு வலைப்பூவாகும்.
ஜெசிலாவின் கிறுக்கல்கள் என தன் வலைப்பூவை குறிப்பிட்டிருந்தாலும் அதில் அவர் கிறுக்கியுள்ளவை கிறுக்கல்களல்ல என்பதை நாம் படிக்கும் போது தெரிந்துக்கொள்ளலாம். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், பெண்ணியம் பற்றியும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் குரல்கொடுத்து எழுதிவரும் இவர் கவிதைகளிலும் கலக்குகிறார் என்பதை நீங்கள் அவரது வலைப்பூவிற்கு சென்று பார்த்தால் தெரிந்துக்கொள்வீர்கள்.
அரசியல் கட்டுரைகள் மட்டும் தான் இவர் எழுதுவார் என நான் நினைத்திருக்கும் பொழுது அருமையான கதைகளும் எழுதி என்னை திகைக்கவைத்தவர் பினாத்தல் சுரேஷ். பினாத்தல்கள். மெல்லிய நகைச்சுவை இழையோட இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளில் மறைந்திருக்கும் கருத்துக்கள் இவரது ஆழமான பார்வையை வெளிப்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து பதிவர்களும் அமீரக பதிவர்கள். ஒரு சிலர் விட்டும் போயிருக்கலாம். இதில் உஷா மட்டும் இப்பொழுது துபாயில் இல்லை என நினைக்கிறேன்.
இன்னும் வரும்.
என்னடா இவன் வலைச்சரத்தின் நார் என தலைப்பு கொடுத்திருக்கானேன்னு யோசிக்கிறிங்க போல. அது ஒண்ணும் இல்லீங்க, எவ்வளவோ முக்கியமான அழகான பூக்களால் தொடுக்கப்பட்டிருக்கும் இவ்வலைச்சரத்தில் நானெல்லாம் நாராக கூட இருக்க தகுதியிருக்கான்னு தெரியலெ அதான்.
நுனிப்புல் மேய்பவர்களில் ஒருவனான என்னை வலைச்சரத்திற்கு அழைத்தது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதிகமாக எதுவும் எழுதாமலிருக்கும் எனது வலைப்பதிவை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ஒற்றை வரி ராசா என்றுக்கூட கிண்டல் அடிக்கின்றனர். ஆனாலும் மதித்து அழைத்ததற்கு நன்றி.
எனது வலைப்பூவில் வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது ஆசையாகவே தான் இன்னும்.
முக்கியமாக முத்தமிழ் மடலாடற் குழுவின் நிர்வாகத்தில் இருப்பதால் பதிவுகள் பக்கம் வர அதிக நேரம் இருப்பதில்லை.
அதிகமாக எழுதவில்லை என்றாலும் சில மொழிப்பெயர்ப்பு முயற்சிகள் செய்துள்ளேன்.
எனது பதிவில் நான் எழுதியுள்ள முன்னிறுத்தல் என்னும் கட்டுரை உங்களுக்கு பயன்படலாம்.
மேலும் சில மொழிப்பெயர்ப்பு கவிதைகளும், நகைச்சுவை கட்டுரைகளும் உள்ளன. நேரம் இருந்தால் பாருங்கள்.
அரசியல், இலக்கியம், வணிகம், விளையாட்டு என பல துறைகளில் ஆர்வம் இருந்தாலும் எல்லாவற்றிலும் மேலோட்டமாகத்தான் சுற்றி வருவதே வாடிக்கையாக போய்விட்டது.
வலைப்பூக்கள் என்னும் தமிழ் பதிவுகள் மற்றும் குழுமங்கள் மூலம் நட்பு வட்டம் விரிவடைந்துள்ளதும் பல புது விசயங்கள் அறிந்துக்கொள்ள முடிவதும் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
கட்டற்ற சுதந்திரம் இருப்பதனால் தனி மனித இன மத தாக்குதல்கள் அதிகமாக இருப்பது வருத்தத்தை அளித்தாலும் அதையும் தாண்டி பல நல்ல படைப்புகளும் புதிய பல படைப்பாளிகளும் தங்கள் திறமையினால் கவனிக்கத்தக்கவர்களாக வளர்ந்துவருவதை மறுப்பதற்கில்லை.
சமீபத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்த பதிவர் பட்டறை மூலம் அது மேலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது போல பல பட்டறைகள் நடத்தப்படவேண்டும் அதன் மூலம் தமிழ் மக்களிடம் அதிக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக தொடர்ந்து உழைத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் நன்றிகள்.
இனி நான் தொடர்ந்து படித்தும் ரசித்தும் வரும் ஒரு சில பதிவுகளை பற்றி நாளை.
சவுண்ட் பார்ட்டி உதயகுமார் இந்த வாரம் வலைச்சரத்தை தொடுத்து தந்தார். அவர் படிக்கலாம் வாங்க அப்படின்னு ஒரே மலரில் மூணு சரம் தொடுத்து விட்டாரேன்னு நெனச்ச போது தான் பொருளாதாரத்தில் ஆரம்பிச்சு, வாழ்வியலுக்கு வந்து நகைச்சுவையில் கொண்டு போய் கதம்பமாகத்தான் தொடுத்திருக்கிறாரென்று தெரிந்தது. தலைப்பு மட்டும் தான் பொதுவாக கொடுத்து தொடர்ர்ர்ர்ராக தந்திருக்கிறார்.
இனி இந்த வார ஆசிரியர் யார்னு பார்த்தால் மஞ்சூர் ராஜா! வலைப்பதிவில் ரொம்ப இடைவெளி விட்டு பதிந்தாலும் அன்புடன் உட்பட பல வலைக்குழுமங்களில் இயங்கியவர் இப்போது முத்தமிழ் வலைக்குழுமத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். வலைச்சர வாரத்தையும் சுறுசுறுப்பாக கொண்டு செல்வார் என நம்பலாம்.
மஞ்சூர் ராஜா தொடர்கிறார்…
காமெடியா எழுதறதுங்கறது ஒரு பெரிய கலை. அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள் இருக்கற மாதிரி மொக்கை, கும்மி என பல இருந்தும் படிக்க வர எல்லோரையும் சிரிக்க வைக்கறது ரொம்ப கஷ்டம்.
இவர் எழுத்தை பார்த்துதான் நானெல்லாம் பிளாக் ஆரம்பிச்சேன்னா நம்புவீங்களா? சும்மா இவரு சுத்தி சுத்தி ஜொள்ளு விட்ட கதையை தங்கமணி, ரங்கமணி எல்லோரையும் வைத்துக் கொண்டே சொன்னதைப் பார்த்துதான் நம்ம நாதாரித்தனத்தையும் எழுதுவோமேன்னு ஆரம்பிச்சதுதான் சவுண்ட் பார்ட்டி.
இன்னைக்கு பிளாக்ல டெவில் ஷோ எல்லொரும் நடத்துனாலும், கான்செப்ட் ரெடி பண்ணி கவுண்டரை களத்துல இறக்குனது நம்ம வெட்டிப்பயல்தான். வெட்டி ஆல் ரவுண்டரா இருந்தாலும் அவர் காமெடியா எழுதி பின்னூட்டக் கயமை இல்லாம கமெண்ட் அள்ளினதுதான் அதிகம்.
அப்புறம் இவர் கோழியோட சேர்ந்து பெங்களூருல அடிச்ச லூட்டிக்கு கோழி மானம் இந்நேரம் கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ன்னு கோபால் பல்பொடி மாதிரி வித்துட்டு இருக்கும்.
எங்க அருண் இப்படி எல்லாம் எழுதுவான்னு நான் நினைச்சதே இல்லை. பாரதிராஜா, வைரமுத்து வை எல்லாம் எகிறி குதிச்சி ஓட வைக்கிற மாதிரி நண்பனை ஊருக்கு அனுப்பிருக்கான் பாருங்க…
அரண்டவன் கண்ணுக்கு இருந்ததெல்லாம் பேயின்னு அருண் சொல்லும் சின்சினாட்டி மாமா கதையையும் படிங்க…
நம்ம பிளாக் மாப்பிள்ள அம்பி பார்ட்டிக்கு போன கதை தெரியுமா? இங்க படிங்க… அதே மாப்பிள்ள, நம்ம பிளாக் மக்கள் கிஃப்ட் குடுத்த வாசிங் மெசின்னுக்கு என்ன பில்டப்? என்ன பில்டப்?
போஸ்டர் ஒட்டுவது எப்படி? ன்னு இவர் பதிவை முதல் தடவை படிக்கும் போதே நினைச்சேன் இவர் விவகாரமான ஆள இருப்பாரோன்னு? பாரதிக்கும் பாரத மாதவுக்கும் என்ன பிரச்சனை என தலைப்பைப் பார்த்து தெரித்து ஓடி விட்டேன். அபி அப்பாவும் தேசியம், திராவிடம்ன்னு கிளம்பிட்டாரான்னு மனசெல்லாம் ஒரே கவலை. என்னதான் ஆனாலும் படிக்காம விடரது இல்லைன்னு படிச்சு முடிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது பேசாம ஒடியே இருக்கலாம்ன்னு, வயித்து வலி வந்துடுச்சுங்க
இன்னமும் நிறைய பேரு நல்லா எழுதறாங்க… நேரம் இருந்தால் இன்னொரு காமெடி தொகுப்புடன் வருகிறேன்…
கல்யாணம்ன்னு வந்தாலே சுதந்திர வானில் சிறக்கடித்து பறக்கும் வாலிப வயோதிக அன்பர்கள் எல்லாம் மட்ட சரக்கு அடித்து அடி வயிறை தடவிக் கொண்டே இருக்கும் குவார்ட்டர் கோவிந்த சாமி ஆகி, பார்ப்பது எல்லாம் பிசாசு, பூதம் என அரற்றிக் கொண்டு, தூங்கும் நேரத்தில் முழித்து, முழிக்கும் நேரத்தில் தூங்கி என பண்ணாத அட்டூழியம் பண்ண ஆரம்பித்து விடுவார்கள்.
“கல்யாணம் for Dummies” ன்னு ஒரு புத்தகம் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என ஹிக்கின் பாதம்ஸ், லேண்ட் மார்க் என் அழைந்து திரிந்தவர்களுக்கெல்லாம், தனித்துவமாய் அத்துவானக் காட்டில் தேன் தேடி அலைந்த சிட்டு ஒன்று, தான் சேகரித்த தேனை எல்லாம் மொத்தமாக 10 நாட்களில், 6 பகுதிகளாக, கல்யாணமாம் கல்யாணம் என கொட்டி வைத்தது.
(மேலே உள்ள 2 பத்திகளுமே ஒரே ஒரு வாக்கியத்தை மட்டுமே உள்ளடக்கியது. ‘வாத்தியார்’ இளவஞ்சியை பத்தி பேச ஆரம்பிச்சாவே முற்றுப் புள்ளி தெறிச்சு ஓடுது. மெகா வாக்கியங்களுக்கு சொந்தக்காரரான இளவஞ்சி எழுதிய அத்தனை பதிவுகளுமே முத்திரைப் பதிவுகள்தான். தாரளமாக, ஆற அமர படிக்கலாம்.)
“அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என ஒரு பாசக்காரப் பயல் அம்மாவிடம் கேட்க, “உனக்கு வடக்கு பக்கம் இருந்துதான் பொண்ணு வரும், அதுவும் நம்ம தூரத்து சொந்தமா இருக்கும்ன்னு நம்ம ஜோசியர் ராஜாமணி சொன்னாரு, நீ எங்கிட்ட விளையாடாதடா” என பதில் சொன்ன அம்மாவை எனக்குத் தெரியும். சொந்த மகனை விட ஜோசிய காரனை நம்பும் இந்த உலகத்தில் ஜோசியம் பற்றி கொஞ்சமாக, ஒரு 13 பகுதிகளாக அலசினார் தருமி. புது பிளாக்கருக்கு மாறியதாலோ என்னவோ கொஞ்சம் சிதறிக் கிடக்கிறது. அதனாலென்ன, பாலையும், தண்ணியையும் பிரிக்கும் அன்னப் பறவையல்லவா நீங்கள்
ஆங்கிலமும், தமிழும் கலந்த காலம் போய் இப்பொழுது ஆங்கிலத்தில் தமிழைத் தூவி பேசிக் கொண்டிருக்கிறேன். கொங்கு மண்டலத்திலேயே பிறந்து, கொங்கு மண்டலத்திலேயே 21 வருடம் வரிக்கும் இருந்தாலும், பல ஊரிலிருந்து வந்த மக்களின் தொடர்பால் என் கொங்குத் தமிழை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து, அப்புறம் வட்டார வழக்கில் பேச ஆளே இல்லை என்ற நிலைக்கு ஆளான போதுதான் மணிகண்டனின் இந்த கொங்கு வட்டாரச் சொற்கள் என் மனதில் புதைந்து போன உபயோகப்படுத்தாத வார்த்தைகளின் எண்ணிக்கை ஒரு சாக்கு மூட்டைக்கும் கொஞ்சம்தான் குறைவு என ஞாபகப்படுத்தியது. இதே மாதிரி மற்ற வட்டார வழக்குகளுக்கும் ஏதாவது பதிவுகள் இருக்கும். கிடைத்தால் லின்க் கண்டிப்பாக இங்கே இருக்கும்.
கொங்கு வட்டார வழக்கு – 1
கொங்கு வட்டார வழக்கு – 2
கொங்கு வட்டார வழக்கு – 3
கொங்கு வட்டார வழக்கு – 4
இந்த மூன்று தொடர்களுமே எல்லோராலும் விரும்பி படிக்கப்பட்ட தொடர்கள் என்றாலும், இந்த மீள் பார்வையின் மூலம் இன்னுமோர் முறை படிக்கப்படும் என்ற நம்பிக்கையில்…
பிளாக் ஆரம்பித்து 2 வருடம் ஆகிறது. 100 பதிவுகளுக்கு மேல் ஆகி விட்டது. பதிவுகள் எதுவும் போடாமல் சவுண்டில்லாத பார்ட்டி என பேரும் வாங்கியாகி விட்டது. ஒரு வித சலிப்பு என்பதை விட திரும்பத் திரும்ப பார்த்த சண்டைகள், விதண்டா வாதத்தில் ஆரம்பித்து தனி மனித தாக்குதல் என வெற்றி நடை போட்ட பிளாக் உலகத்தை கூகுல் ரீடரின் வழியே என் வலை மேயும் வட்டத்தையும் சுருக்கி வெகு நாட்களாகி விட்டது. வளர்ந்த மரத்தில் விளைந்த பழத்தின் சுவையை மட்டும் அறிந்து புதிய விதைகளின் வீரியத்தை உணர மறுக்கிறேன் என எத்தனை முறை மனதுக்குள் வாதம் செய்தாலும் நல்ல பதிவுகளை இணங்காண்பது என்பது அப்படி ஒன்றும் அரிதாகிக் கொண்டிருக்கும் விசயம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆடம் ஸ்மித்தின் கேப்பிடலிஸம், காரல் மார்க்சின் கம்யூனிசம் என உள் மன விவாதங்கள் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்தது இந்த பதிவுலகத்துக்கு வந்த பின் தான்.
“ஊடகங்கள் – கம்யூனிச சார்பு ஊடகங்கள் தவிர்த்து – பொதுவாகவே பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதை மோசமான முறையில் காட்டுவார்கள்.ஒரு நிறுவனம் இழுத்துமூடப்படுகிறது என்றால் அதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது பணியாளர்கள் மட்டுமே. எனவே அதை உணர்ந்து வேலை நிறுத்தம்வரை பணியாளர்கள் செல்கிறார்கள் என்றால் அதற்கான காரணம் வலுவாகத்தான் இருக்கும். “
“தொழிலாளர் நலச்சட்டங்கள் வலுவூட்டப்படவேண்டுமே அன்றி, நீர்த்துபோகச் செய்தல் கூடாது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுபடியாகாது என்ற நிலை இதனாலேயே முற்றிலுமாக எதிர்க்கப்படவேண்டும். இந்த ஒரு காரணத்தாலேயே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை எதிர்க்க வேண்டும்.”
என சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு தனது எதிர்ப்பை தெளிவாக பதிவு செய்திருந்தார் பத்ரி தனது மே தின சிந்தனைகள் பதிவில்.
மைக்ரோ கிரெடிட், விக்ரம் அகுலா (Vikram Akula) என யாரோ சொல்லிச் சென்ற வார்த்தைகள் பின் மண்டையில் இருந்தாலும் முகம்மது யூனிஸ் என்ற இன்னொரு மனிதரின் மூலம் என்னிடம் சேர்த்தவர் செல்லமுத்து குப்புசாமி.
கந்து வட்டிக்கு ஆப்பு அடிக்கலாம் வாங்க!! என அவர் விட்ட அறைகூவலில்தான் மைக்ரோ கிரெடிட் இன்னமும் கொஞ்சம் மண்டையில் தங்கி உள்ளது.
Microfranchising பற்றி ஒரு எதிர்பாராத இடத்திலிருந்து ஒரு லிங்க். பாலா ஒரு பாமரனுக்கும் புரியும் வண்ணம் அற்புதமாக எழுதியிருந்தார்.
சில சமயங்களில் முன் முடிகளுடன் பதிவை அணுகி பின் மண்டையில் தட்டிக் கொண்டு வெளி வந்த அனுபவம் நிறைய. ராஜா வனஜ்ஜின் அவனுடைய உமியும் – நம்முடைய நெல்லும்! அப்படித்தான:)
கத்துக் குட்டியாகிய எனக்கு இன்னமும் இந்த பிளாக் உலகம் தான் பொருளாதாரத்தைக் கத்துக் கொடுத்துக் கொண்டுள்ளது.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
சென்னை வலைப்பதிவர் பட்டறைக்கான நிறைய வேலைகளில் மூழ்கிக் களைத்த போதும் மறக்காமல் வந்து மூன்று பதிவிட்டு வலைச்சரத்தை நல்லபடியாக தொகுத்த பாலாபாய்க்கு முதற்கண் எங்க நன்றி. அதிலும் பா.க.ச வாரமாக இருக்க வேண்டியதை மொத்தமாக தாய்க்குல வாரமாக்கி பெருமைப்படுத்தியதற்கு இன்னுமொரு சிறப்பு நன்றி
. [இப்படி எல்லாம் செஞ்சா பா.க.சவை மூடிடுவோம்னு கனவு காணாதீங்க.. அக்காங்
]
இந்த வாரம் தொகுக்க ஒப்புக் கொண்டிருந்த நண்பருக்கு திடீரென வேறு வேலைகள் வந்துவிட்டதால், இந்த வார திடீர் ஆசிரியர் நம்ம சவுண்ட் பார்ட்டி உதயகுமார்.
எப்போதோ படித்த சுஜாதாவின் கதையை என்னால் இன்னும் மறக்க முடியாது. நண்பன் ஒருவனைத்தேடி அவன் வீட்டுக்கு வருவார் ஒருவர். திண்ணையில் அமர்ந்து வாசலில் விளையாடிக்கொடிருக்கும் நண்பனின் குழந்தையிடம் பேச்சுக்கொடுப்பார்.
“ஒம் பேர் ன்னா?”
“ச்சூல் போறியா?”
“எத்தனாப்பூ?”
“அப்பா இக்காரா?”
“உன்க்கு அப்பா பிக்குமா? அம்மா பிக்குமா?” என்று குழந்தைகளில் பேசுவது போலவே அதனோடு பேசிக்கொண்டிருப்பார். அந்த குழந்தையோ..
“ரம்யா”
“ஸ்கூல் போகிறேன்”
“தேர்ட் ஸ்டாண்டேர்டு படிக்கிறேன்”
“உள்ளே வேலையாக இருக்கிறார்”
“ரெண்டு பேரையும் பிடிக்கும்” என்று தெளிவான மொழியில் பதில் சொல்லிக்கொண்டிருக்கும். இவரோ குழந்தை போல அதனுடன் கதைத்துக்கொண்டு இருப்பார். “அப்பாவை பாக்க லாஜூ வந்திருக்கேன்னு சொல்லு..” என்று குழந்தையை வீட்டுனுள் அனுப்பி வைப்பார் அவர். உள்ளே வந்த குழந்தை அப்பாவிடம், “அப்பா, ராஜூன்னு உன்னோட ப்ரண்ட் வந்திருக்கார் உன்னை பார்க்க. திண்ணையில உட்கார்ந்திருக்கார். ஆமாப்பா.. அவரு ஏன் தம்பி பாப்பா மாதிரியே பேசுறார்? என்று ஒரு கேள்வியைக்கேட்பதுடன் கதை முடிந்து போகும்.
குழந்தைகள் உலகம் அலாதியானது. நம் எல்லோராலும் அவர்கள் உலகினுள் பிரவேசிக்க முடியாது. ஆனால் அவர்கள் அநாயசமாக நம் உலகினுள் நுழைந்துவிடுவார்கள். இதோ அஞ்சலி பாப்பாவின் குட்டிக்கதை. உலகினுள் நுழைய முயன்று பாருங்கள்!
☃☃☃☃☃☃☃☃☃
தான்யா எழுதிய இந்த பதிவு குறித்து பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். தொடர்ந்து இச்சமூகம் பெண்கள் மீது தொடுக்கும் தாகுதல் குறித்தும் மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால்.. வலி! இதை உணர்ந்தவர்களால் மட்டுமே சரியாக சொல்லமுடியும். தீயில் எரிபவனைப் பார்த்து. ச்சுகொட்டிக்கொண்டு.. அவன் வலியை உணர்ந்து விட்டேன் என்பதற்கும், எரிந்துகொண்டிருப்பவன் அந்த வலியை உணர்வதற்கும் பில்லியன் வித்தியாசங்கள் உண்டு!
☃☃☃☃☃☃☃☃☃
சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வம் மிக்கவரா, புனைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிவருவதான புலம்புகின்றவரா.. அப்படியானால் நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டிய சிறுகதை இது. மொழியும் நடையும் வித்தியாசமானவை. பத்தி பிரிக்காமல் இருப்பது வாசிப்பதற்கான இடையூறு!
☃☃☃☃☃☃☃☃☃
எதுபற்றியும் ஆண்கள் மட்டும் பேசலாம். பெண்கள் எதைப்பேசினாலும் உடனே மண்ணை கீறி பூதங்கள் வெளியே வரத்தொடங்கி விடும். அவற்றைக்கண்டு பயப்படாமல் இருப்பவர்கள் குறைவு. பெண் உடலுக்குள் ஆண் குரலாக ஒலித்துக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்க. அதன் குரலை அதன் இயல்பில் பதிவாக்கி இருக்கிறார் கறுப்பி.
{தொடரலாம்.. தொடர முடியாமலும் போகலாம். அதலான இப்பவே சொல்லி விடுகிறேன்}
வலைச்சரத்தில் வாய்ப்பு வழங்கியவர்களுக்கு நன்றி!